யார் இந்த யூசுப் அல் கர்ளாவி...?


உஸ்தாத்(?) ரஷீத் ஹஜ்ஜுல் அக்பரின் மேன்மைக்குரிய இமாமும்(?) ஜமாததே இஸ்லாமி , D.A (இஹ்வான்) சகோதரர்களின் தலை சிறந்த அறிஞரு(?)மான யூசுப் அல் கர்ளாவியின் கீழ்த்தரமான பத்வாக்கள்.

பத்வா 01.Mar 21, ௨௦௧

முஸ்லிம் பெண்கள் சினிமாவில் நடிக்கலாம்!

யூசுஃப் அல் கர்ளாவியை ஓர் மார்க்க அறிஞராக காண்பிக்க, மார்க்கத்தின் அடிப்படைகள் தெரியாத சில கனவுலக இயக்கங்கள் முயற்சிக்கின்றன. யூசுஃப் அல் கர்ளாவிக்கு எப்படி இஸ்லாத்தின் அடிப்படைகளும் ஒழுக்கப்பண்பாடுகளும் தெரியவில்லையோ அதேபோல அவரது விசிறிகளுக்கும் தெரியவில்லை. இவர் எழுதிய பல நூல்களில், கட்டுரைகளில் யூத, கிறஸ்தவர்களுக்கு கூஜா தூக்கும் நிலை தாராளமாக காணக்கூடியதாக உள்ளது. உலகத்தில் ஒழுக்கக்கேட்டையும் பண்பாட்டு சீரழிவையும் பரப்புபவர்களில் யூத, கிறிஸ்தவர்கள் முன்னிலை வகிக்கின்றனர். இவர்களுடைய பிரதான தொழிலான இசையும் சினிமாவும் யூசுஃப் அல் கர்ளாவிக்கு ஹலாலாக தெரிகிறது.

இசையும் சினிமாவும் ஹலால் என்று தனது ஃபத்வா முஆஸிராவில் குறிப்பிடுகின்றார் இவர்.

இசை ஹலால் என்று அல் ஹலால் வல் ஹராம்‘ என்ற புத்தகத்தில் பக்கம் 391-ல் குறிப்பிடுகின்றார்.
முஸ்லிம் பெண்கள் நாடகங்கள் மற்றும் சினிமாவில் பங்கேற்பது தடையில்லை என்று குறிப்பிடுகிறார். (ஜரீததுல் அக்பார் எண் 401)

ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் குழிதோண்டி புதைக்கும் வெறித்தனமான ஆடலுடன் கூடிய பாடல் காட்சிகளுடன் வெளிவரும் இன்றைய சினிமாவின் நிலையை கொஞ்சம் மனக்கண்முன் நிறுத்தி பாருங்கள்.
தொப்புளில் ஆம்லெட் போடுவதும், பம்பரம் விடுவதும், டூ பீஸ் நீச்சல் உடையுடன் பெண்களை அலையவிட்டு காமவெறியாட்டம் புரிவதும் படுக்கை அறை காட்சிகளை அப்பட்டமாக காண்பிக்கும் சினிமா, இவருக்கு ஹலாலாம். பணத்திற்காக முக்கால் நிர்வாணமாக நடிக்கும் இந்த சினிமாவில் முஸ்லிம் பெண்களும் பங்குபெறலாமாம். கிழவனைக்கூட பாலியல் துஷ்பிரயோகம் செய்யத்தூண்டும் இசையையும் சினிமாவையும் ஹலால் என்பவன் உண்மையில் இஸ்லாத்தை நேசிப்பவனாக இருக்கவே முடியாது.
நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து எனக்கு விபச்சாரம் செய்ய அனுமதி தாருங்கள்என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் அவரை அழைத்து, ‘உன்னுடைய தாயுடனோ அல்லது சகோதரியுடனோ யாரும் விபச்சாரம் செய்வதை நீர் விரும்புவீரா?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘நான் விரும்பமாட்டேன்‘ என்று கூறினார்.அப்போது நபியவர்கள் நீர் யாருடன் விபச்சாரம் செய்ய விரும்புவீரோ,அவளுடைய சகோதரனும் உறவினரும் இதை விரும்பமாட்டார்கள்‘ என்று கூறினார்கள்.

சினிமாவையும் பாடலையும் ஹலால் என்று கூறும் யூசுஃப் அல் கர்ளாவி, தனது மகளை, மனைவியை சினிமாவில் நடிக்க அனுமதிப்பாரா? தினம் ஒரு அந்நியனோடு படுக்கையறை காட்சிகளில் முக்கால் நிர்வாணமாய் நடிக்க சம்மதிப்பாரா? அல்லது இவரை பின்பற்றும் நவீன கிலாஃபத் கோஷதாரிகளே! இஸ்லாமிய ஆட்சியை உலகம் முழுவதும் கொண்டுவர துடிக்கும் இரகசிய காவலர்களே! உங்கள் குடும்பத்தினரை இதுபோல் சினமாவில் நடிக்க அனுமதிப்பீர்களா?
அவர்கள் உமக்குப் பதிலளிக்கா விட்டால் அவர்கள் தமது மனோ இச்சைகளையேபின்பற்றுகின்றனர் என்பதை அறிந்து கொள்வீராக! அல்லாஹ்விடமிருந்து கிடைத்தநேர் வழியின்றி தனது மனோ இச்சையைப் பின்பற்றியவனை விட வழி கெட்டவன் யார்? அல்லாஹ் அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு நேர் வழி காட்ட மாட்டான்.
(திருக்குர்ஆன் 28:50)


பாத்வா 02 
போதை ஹலால்.
அண்மையில் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தினரின் மூத்த அறிஞர்களில்!ஒருவரானகலாநிதி யூஸுப் அல்கர்ளாவி அவர்கள் “ஸஹீபதுல் அரப்”பத்திரிகையில் வழங்கியுள்ள ஒரு விநோதமான பத்வா உலகளாவிய முஸ்லிம் உம்மத்தின் மத்தியில் குறிப்பாக மத்திய கிழக்கில்வாழும் முஸ்லிம்கள் மத்தியிலும் பேர‌திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் இஸ்லாமிய அறிஞர்கள் மட்டத்திலும் கடும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குறைந்தளவிலான அல்கஹோல்(போதை மூலப்பொருள்)கொண்டுள்ள உற்சாக பானமான “ரெட்புல்”பற்றிய வாசகரின் கேள்விக்கு பதிலளிக்கையில் பின்வருமாறு தெரிவித்தார்.

“குறைந்தளவிலான போதைப்பொருள் (அல்கஹோல்)இஸ்லாத்தில் ஹராமில்லை.குறிப்பாக இயற்கை முறையில் புளிக்கவைக்கப்பட்ட (போதையாக்கப்பட்ட)சிறியளவிலான 0.5% போதைப்பொருள் இஸ்லாத்தில் அனுமதிக்கப் பட்டதே!”
மேற்படி கர்ளாவி அவர்களின் பத்வாவை விமர்சித்த “ஷர்க்” எனும் கட்டார்நாட்டின் பத்திரிகை ஆசிரியர் மேற்படி பத்வா முஸ்லிம்களுக்கு மத்தியில் கடுமையான விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும்,இந்த‌ பத்வா கர்ளாவி அவர்களுக்கு தேவையில்லாத ஒரு பத்வா எனவும் தன‌து வெள்ளிக்கிழமை ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.‌
மேற்படி பத்வாவின் மூலத்தை அறிய இங்கே சொடுக்கவும்.
ஆங்கிலத்தில்

அர‌பியில்

இதுபோன்ற இஸ்லாத்தின் பொன்னான போதனைகளுக்கு முற்றிலும் மாற்றமான,முஸ்லிம்களின் ஒழுக்க விழுமியங்களை சீர்குலைக்கின்ற பத்வாவை இந்த யூஸுப் அல்கர்ளாவி வெளியிடுவது இது தான் முதற்தடவையல்ல. இதற்கு மாறாக ஏற்கனவே இவர் சிறு அளவிலான வட்டி கூடுமென பத்வா வழங்கி தாயோடு விபச்சாரம் செய்வதற்குச் சமமென நபிகளாரால் எச்சரிக்கப்பட்டவட்டியை ஹலாலாக்கியதும்,இன்று வழிகெட்ட‌ ஷீஆக்களின் விபச்சார முறையான “முத்ஆ” (தவணை முறை திருமணம்) வை ஹலாலாக்கி முஸ்லிம்களின் ஒழுக்கச் சீர்கேட்டுக்கு வித்திட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மேற்படி ஆதாரமற்ற,அறிவுபூர்வமற்ற,உளற‌ல்களை மறுதளிக்குமுகமாக நபி(ஸல்)அவர்களின்
ஒரு பொருளை அதிகம் பாவிப்பதால் போதை ஏற்படும் என்றால் அப்பொருளைகுறைவாகப் பாவிப்பதும் ஹராமே
எனும் ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி)அவர்களால் அறிவிக்கப்படும் அபூதாவுதில் இடம்பெற்றிருக்கும் பொன்மொழி அமைந்துள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
سنن أبي داود – (ج 10 / ص 106)
3196 – حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا إِسْمَعِيلُ يَعْنِي ابْنَ جَعْفَرٍ عَنْ دَاوُدَ بْنِ بَكْرِ بْنِ أَبِي الْفُرَاتِ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَسْكَرَ كَثِيرُهُ فَقَلِيلُهُ حَرَامٌ
பத்துக்கோப்பை மது அருந்தினால் போதை ஏற்படுமென்றிருந்தால் ஒன்பது கோப்பை அருந்துவது ஹலாலாகும், கஞ்ஞாவை ஆலிம்கள் மட்டும் குடிக்கலாம்,பாமர மக்களிடம் சொல்லக் கூடாது, விபச்சாரம் செய்து மாட்டிக்கொண்டால் “இவள் எனது மனைவி” என்று கூறி தண்டனையிலிருந்து தப்பிக்கொள்ளலாம் என்பது போன்ற மெளட்டீகங்களை உள்ளடக்கிய மத்ஹபுகளுக்கு வ‌க்கால‌த்து வாங்கி அவை முஸ்லிம் ச‌மூக‌த்தின் “சிந்த‌னைப் பார‌ம்ப‌ரிய‌ம்”!!என்று போற்றி வ‌ரும் இஹ்வானுல் முஸ்லிமீன் இய‌க்க‌வாதிக‌ளிட‌மிருந்து இவ்வாறான‌ உள‌ற‌ல்க‌ள் ப‌த்வாக்க‌ளாக‌ வெளிவ‌ருவ‌தையிட்டு முஸ்லிம்க‌ள் விழிப்புண‌ர்வுட‌ன் இருக்க‌ வேண்டும்

இதோ கர்ளாவியின் இணையத்திலிருந்து
حكم المشروبات التي تحتوي على نسبة من الكحول
موقع القرضاوي/15-4-2005
تلقى فضيلة العلامة الدكتور يوسف القرضاوي – رئيس الإتحاد العالمي لعلماء المسلمين – استفساراً من محمد لشيب(جريدة العرب) يقول فيه: فضيلة الشيخ الدكتور يوسف القرضاوي حفظه الله، السلام عليكم ورحمة الله وبركاته، (وبعد) صرح الدكتور محمد سيف الكواري المدير العام للهيئة القطرية للمواصفات والمقاييس أول أمس في ندوة حول تأثير مشروبات الطاقة، بأن هناك مواصفة قياسية قطرية بخصوص المشروبات تسمح بوجود ما نسبته0,05 % بالمائة من الكحول بالمشروبات الموجودة بالسوق.
ويؤكد الكواري على أن هذه النسبة طبيعية بفعل التخمر الطبيعي وغير مصنعة.
- فما رأي الشرع في تناول هذه المواد التي تتضمن هذه النسبة؟
- وهل التنصيص عليها قانونا جائز؟
- وماذا عن حديث الرسول صلى الله عليه وسلم: “ما أسكر كثيره فقليله حرام”؟
الجواب:
وقد أجاب فضيلته على السائل بقوله: الحمد لله، والصلاة والسلام على رسول الله، وعلى آله وصحبه، ومن اتبعه إلى يوم الدين.
(وبعد)
هذه النسبة: 0.5% خمسة من مائة في المائة – وبعبارة أخرى: خمسة في الألف – لا أثر لها في التحريم، لأنها نسبة ضئيلة جدا، وكما قال الدكتور: إنها تحدث بفعل التخمر الطبيعي، وليست مصنعة، ولذلك لا أرى حرجا من تناول هذا المشروب.
والشريعة الإسلامية شريعة واقعية، ومن واقعيتها هنا: أنها وضعت قاعدة مهمة جاء بها الحديث الشريف، وهي أن “ما أسكر كثيره، فقليله حرام”. وأعتقد أن أي إنسان شرب من هذا المشروب ما شرب فلن يسكره، ولذا لا يحرم القليل منه.
وأما التنصيص على هذه النسبة، فهو أمر جائز ولا حرج فيه، حتى يعرف الناس الحقيقة، ولا يصدقوا الشائعات التي يروجها بعض الناس أحيانا لأغراض شتى، وبيان الأمور على حقيقتها لا ضرر فيه بحال.
وأود أن أنبه على أن هذه النسبة من الكحول وما في حكمها، إذا أضيفت عمدا إلى المشروب لغير حاجة صحية أو طبية، أو نحو ذلك، فإن من أضافها يأثم على ذلك. وإن لم يكن مؤثرا في إباحتها لشاربها.
وبالله التوفيق

http://www.qaradawi.net/site/topics/article.asp?cu_no=2&item_no=5881&version=1&template_id=130&parent_id=17
.


பத்வா 03
சுய இன்பம் கூடும் ஆனால் கூடாது. 

இக்வானிஸ சிந்தனையாளர் யூசுப் கர்ளாவிளியின் மார்க்கத்திற்கு முரணான பத்வாக்களை அவருடைய நூலிலிருந்தே தோலுறித்து காட்டி வருகின்றோம்.
அவர் எழுதிய ஹலால் வல் ஹராம் என்ற நூ­ல் பக்கம் 161 ல் அவர் அதில் சுய இன்பத்தைப்பற்றி எழுதிக் கொண்டு வருகிறார்….
இமாம் மாலிக் உட்பட பல அறிஞர்கள் சுய இன்பத்தை தடை செய்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கருத்துக்காக தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர, தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். 23 : 5, 6 வசனத்தை ஆதாரமாக கொள்கிறார்கள்.
இமாம் அஹ்மத் ரஹ் அவர்கள் இந்திரியத்துளியை உடம்பில் உள்ள ஒரு பகுததியாக கருதினார்கள். மேலும் இரத்தம் குத்தி எடுப்பது எப்படி ஆனுமானதோ அது போன்று இந்திரியத்தையும் வெளியாக்குவதும் கூடும் என்று அஹ்மத் ரஹ் அவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இதை இப்னு ஹஸ்ம் ரஹ் அவர்களும் ஆதரித்துள்ளார்கள்.
ஆனால் ஹன்ப­லி மத்ஹபின் உலமாக்கள் இந்திரியத்தை வெளியாக்குவதை இரண்டு காரியங்களுக்கு அனுமதியளித்துள்ளார்கள். ஒன்று விபச்சாரத்தை விழுவதை பயப்படும் போது மற்றொன்று திருமணம் முடிக்க சக்தி இல்லாத போதும்.
இமாம் அஹ்மத் ரஹ் அவர்களின் சொல்லை சில நேரங்களில் நாம் பின்பற்றலாம் உம் செக்ஸ் உணர்ச்சிகள் அதிகமாகும் போதும், ஹராமில் விழுந்து விடுவோம் என்பதை பயப்படும் போதும் (சுய இன்பம் செய்து கொள்ளலாம்). ஒரு வா­பன் தன்னுடைய சொந்த நாட்டை விட்டு வெளியூரில் தங்கி படிக்கும் இளைஞனைப் போல அல்லது வேலை செய்கிற இளைஞனைப் போல.
அந்த இளைஞனுக்கு முன்னால் ஏமாற்றும் வேலைகள் நிறைவாகவே இருக்கின்றது. விபச்சாரத்தை பயப்படுகின்றான். எனவே அவன் செக்ஸ் உணர்ச்சிகளை அணைப்பதற்காக இது போன்ற வேலைகளை செய்து கொள்ளலாம். ஆனால் இதில் அந்த இளைஞன் வரம்பு  கடந்து விடக்கூடாது.
இதை விட சிறந்த வழி நபிகள் நாயகம் ஸல் அவர்கள் திருமண முடிக்க முடியாத இளைஞர்களுக்கு நோன்பை நோற்கச் சொன்னார்களே அதுதான் சிறந்த வழி.
இதுதான் அவர் தன்னுடைய புத்தகத்தில் எழுதிய கருத்துக்களின் சுருக்கம்.
இமாம் மா­லிக் அவர்கள் அழகான முறையில் ஒரு குர்ஆன் வசனத்தைக்காட்டி சுய இன்பம் ஹராம் என்று அறிவிக்கிறார்கள். இதைதான் ஒரு முஃமின் குர்ஆன் வசனத்திற்கு கட்டுப்பட்டு தன்னுடைய தீர்ப்பையும் அமைத்திருக்க வேண்டும். ஆனால் கர்ளாவியோ இந்த தீர்ப்பிலும் குர்ஆன் வசனத்தை தன்னுடைய முதுகுக்குப்பிறகு தூக்கி எரிந்துள்ளார்.
அது மட்டுமில்லாமல் அவரே சொன்ன மாதிரி நபிகள் நாயகம் திருமணம் முடிக்க முடியாத இளைஞர்களுக்கு அழகான வழிகாட்டியை காட்டிக் கொடுத்திருக்கும் போது அந்த அழகான வழிகாட்டியையும் தூக்கி எரிந்து விட்டார்.
அது மட்டுமா தன்னுடைய கருத்துக்களைக்கூட சரியான முறையில் பதிவு செய்ய தவறி முரண்பட்டு பேசுகிறார்.
இச்சை ஏற்படும் போதெல்லாம் சுய இன்பம் செய்யலாம் என் சொல்­விட்டு இதில் வரம்பு மீறி சென்று விடக்கூடாது என்று முரண்படுகிறார்.
இச்சை ஏற்படும் போது ஒருவர் இந்தக்காரியத்தை செய்வார். இதில் வரம்பு மீறுதல் என்றால் என்ன?
மனைவி அல்லது அடிமை இவர்களிடத்தில் தவிர எந்த வழியையும் தேடக்கூடாது என்றும் அப்படி தேடுவது வரம்பு மீறிய காரியம் என்று அல்லாஹ் சொல்­யிருக்கும் போது சுய இன்பம் எந்த வகையில் ஹலாலாகும்?
விபச்சாரத்தை பயந்தால் இந்த வழியை கையாள்வது சிறந்தது தானே என்ற வாதத்தை நாம் ஏற்றுக் கொண்டால் விபச்சாரத்தை பயந்தால் ஹோமோ செக்ஸ் செய்யலாம்தானே. மார்க்கத்தில் எப்படி சுய இன்பம் தடை செய்யப்பட்டிருக்கிறதோ அதே போல்தான் ஹோமோ செக்ஸ்சும் தடை செய்யப்பட்டிருக்கிறது. தடை செய்யப்பட்டது எப்படி அனுமதியாகும்?
நிர்பந்தத்தில் அனுமதி என்ற வாதத்தை வைத்தால் நிர்பந்தத்தில் ஹோமோவும் கூடும் என்று வரும். ஆகையால் இந்த தீர்ப்பு மார்க்கத்திற்கு எதிரான தீர்ப்பு என்பதை இக்வானிகள் அறிய வேண்டும்.

பத்வா 04

கிரிஸ்தவர்களும் முஃமின்களே...











இஸ்லாமிய சமுதாயம் நாம் வாழும் காலத்தில் பலவேறு சோதனைகளை தாங்கி வருகிறது, சிலர் ஆ­ம் என்னும் போர்வையை போர்த்திக் கொண்டு புதுப்பித்தல் என்ற பெயரில் ஷரியத்தை அழிக்கும் காரியத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். (இஸ்லாமிய மறுமலர்ச்சி என்னும் புத்தகம் இதற்கு ஒரு எடுத்துக் காட்டு)





மார்க்கத்தை எளிதாக்குங்கள் என்ற போர்வையில் பஸாதை சொல்கிறார்கள். இஜ்திஹாத்  என்ற பெயரில் மோசமான காரியங்களை திறந்துவிடுகிறார்கள். பிக்ஹீல் அவ்லவிய்யாத் (முன்னுரிமை கொடுக்க வேண்டிய பிரச்சனைகள்) என்ற பார்வையில் சுன்னத்தைகளை இழிவுபடுத்துகிறார்கள்.
இஸ்லாத்தின் தோற்றத்தை அழகாக்கி காட்டுகிறோம் என்ற சிந்தனையில் குப்பார்களை காபிர்களை உற்ற நண்பர்களாக ஆக்கி கொள்கிறார்கள்.
இந்த சிந்தனையில் உள்ளவர்தான் சமீபகால பஸாதி யூசுப் கர்ளாவி ஆவார்.
இவர் மார்க்கத்திற்கு விரோதமான கொடுத்த பத்வாக்களை தோழுறித்துக் காட்டிக் கொண்டிருக்கிறோம்.

قال عن النصارى :( فكل القضايا بيننا مشتركة فنحن أبناء وطن واحد، مصيرنا واحد، أمتنا واحدة، أنا أقول عنهم إخواننا المسيحيين، البعض ينكر علي هذا كيف أقول إخواننا المسيحيين؟ (إنما المؤمنون أخوة) نعم نحن مؤمنون وهم مؤمنون بوجه آخر.
He said of the Christians: (All the issues we have common we are all children of one homeland, our destiny is one of our nation and one, I tell them our Christian brothers, some deny this is how I tell our Christian brothers? (The Believers are but brothers) Yes, we believe they believe in another way.
கிரிஸ்தவர்களைப்பார்த்து ஒரு தொலைக்காட்சி நிகழ்சியில் சொல்கிறார்.
நமக்கு மத்தியில் உள்ள பிரச்சனைகள் கூட்டானதாகும். நாம் அனைவரும் ஒரே நாட்டின் பிள்ளைகள். நாம் செல்லும் இடங்களும் ஒன்றே. நம்முடைய சமுதாயமும் ஒன்றே. நான் அவர்களைப்பற்றி கிரிஸ்தவர்கள் நம்முடைய சகோதரர்கள் என்றே சொல்கிறேன். சிலர் முஸ:­ம்கள் தானே ஒருவொருக் கொருவர் சகோதரர்கள்.

கிரிஸ்தவர்களை எப்படி நம்முடைய சகோதரர்கள் என்று சொல்வது? என்று ஆட்சேபனை செய்கிறார்கள். ஆம் நாம் ஒரு வகையில் முஃமின்கள். அவர்கள் ஒருவகையில் முஃமின்கள்.
இந்த யூத கிரிஸ்தவ கூட்டாளி நண்பன் யூசுப் கர்ளாவி இப்படி சொல்­யிருக்க அல்லாஹ் பின் வரும் இரண்டு வசனங்களிலும் யூதர்களையும் கிரிஸ்தவர்களையும் பார்த்து என்ன  சொல்கிறான் என்று பாருங்கள்.
நம்பிக்கை கொண்டோரே! யூதர்களையும், கிறித்தவர்களையும் உங்கள் பாதுகாவலர்களாக்கிக் கொள்ளாதீர்கள்!89 அவர்களில் ஒருவர் மற்றவருக்குப் பாது காவலர்கள். உங்களில் அவர்களைப் பொறுப் பாளராக்கிக் கொள்வோர் அவர்களைச் சேர்ந்தவரே. அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான். 5: 51

நம்பிக்கை கொண்டோருக்கு மனிதர்களிலேயே கடுமையான பகைவர்களாக யூதர்களையும், இணை கற்பிப்போரையும் (முஹம்மதே!) நீர் காண்பீர்! ”நாங்கள் கிறித்தவர்கள்” எனக் கூறியோர் நம்பிக்கை கொண்டோருக்கு மிக நெருக்கமான நேசமுடையோராக இருப்பதையும் நீர் காண்பீர்! அவர்களில் பாதிரிகளும், துறவிகளும் இருப்பதும், அவர்கள் ஆணவம் கொள்ளாது இருப்பதுமே இதற்குக் காரணம். 5 : 82


குறிப்பு: இன்னும் கன்றாவித்தனமாக நிறைய பாத்வாக்களை இவர் வழங்கியிருக்கிறார். தேவைப் படும் பொது அவற்றை வெளியிடுவோம்.

safwan lanka 
Share this article :

+ comments + 1 comments

Thursday, 12 September, 2019

இவர் யூசுப் அல் கர்ளாவியா ?. அல்லது கன்ராவியா?"

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger