தமிழகத்தில் இனி பான்பராக், குட்காவுக்கு தடை!



பான்பராக்சென்னை: தமிழகத்தில் பான் பராக், குட்கா தயாரிக்கவும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். மேலும் புகையிலைப் பொருட்களுக்கும் இந்த தடை பொருந்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது என்றும் உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி உணவு பொருளில் புகையிலை கலப்பது குற்றமாகும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

முதல்வரின் இந்த அறிவிப்பு மக்களிடையே குறிப்பாக பெற்றோர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நேரம் 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger