புனே வரை நீண்ட வாதம்...4


மேலும் வாரிசு என்பது மனிதர்களுக்கு நிச்சயம் தேவையான ஒன்றுதான். ஏனெனில், மனிதன் முதுமை அடையும்போது அவனையும் அவனது சொத்துக்களையும் பாதுகாக்க, அவன் மரணித்துவிட்டபிறகு அவனது இறுதிச்சடங்குகளை செய்ய ஒரு வாரிசு அவனுக்கு இன்றிஅமையாத ஒன்றாகும். ஆனால் ஆதியும் அந்தமும் இல்லாத ஆண்டவருக்கு வாரிசுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று எந்தஒரு நிர்பந்தமும் இல்லை. ஏனெனில் அவர் சகலத்தையும் நிர்வகிக்கக்கூடிய வல்லமை படைத்தவர். அவருக்கு முதுமை கிடையாது. அவர் பலவீனப்படப்போவதும் இல்லை. அப்படி இருக்கையில் எந்தத்தேவையும் இல்லாத ஆண்டவருக்கு புதல்வர் உள்ளதாக நாம் கூறினால் அது கடவுளின் தன்மைகளுக்கும் அவரது வல்லமைகளுக்கும் நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய இழுக்காகும். அது ஆண்டவருக்கு ஒருகாலும் பெருமை சேர்க்கப்போவதில்லை. மாறாக அவரை இழிவுபடுத்தும் செயலாகவே அது அமையும் என்பதனையும் அவர்களுக்கு எடுத்துறைத்தோம்.

இறுதியாக, ”மேற்கண்ட பைபிள் வசனங்கள் மற்றும் சம்பவங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, ஏசு என்பவர் கர்த்தரின் மகன் இல்லை. மாறாக, கர்த்தரின் தூய்மையான போதனைகளை இவ்வுலகிற்குச் சொல்லவந்த உண்மையான அடியாரும் கர்த்தரின் செய்திகளை மக்களுக்கு கொண்டுசெல்லும் தூதருமாகத்தான் உள்ளார்” என்று கூறி எங்கள் வாதத்தை நிறைவு செய்தோம். 
மிகவும் யோசித்தவராக சிறிதுநேரம் அமைதியாக இருந்த அந்த பேராயர் அவர்கள் பின் எங்களை நோக்கி, “ஆம், நீங்கள் சொல்வது சரிதான். தங்களின் வாதங்களின் அடிப்படையில் பார்க்கும்போது ஏசு கர்த்தரின் மகன் இல்லை என்ற முடிவுக்கே வரமுடிகிறது. மேலும் அவர் இறைவனின் தூதராகத்தான் இருக்கமுடியும் எனவும் புலப்படுகிறது” என்று கூறினார்.  
அல்ஹம்துலில்லாஹ்! 
சத்தியத்தை தூய்மையான வழியில் எடுத்துச்சொல்ல வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்து அந்த சத்தியத்தை அவர்கள் உள்ளம் வரை எட்டச்செய்த எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு மனதிற்குள் நன்றிகளை தெரிவித்துக்கொண்டோம். 
மதிய உணவிற்குப்பிறகு தொடங்கிய இந்த கலந்துரையாடலை நாங்கள் நிறைவு செய்தபோது நேரம் இரவு 8.00-ஐ கடந்திருந்தது. இரயில் வண்டியும் திண்டுக்கல் இரயில் நிலையத்தை தாண்டி மதுரையை நெருங்கிக்கொண்டிருந்தது.  
பிறகு நாங்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் எங்களின் விலாசங்களை பகிர்ந்துகொண்டோம். தங்களது தொலைபேசி எண்களையும் மின் அஞ்சல் முகவரிகளையும் கொடுத்து, மார்க்கம் சம்பந்தமான தகவல்களை பகிர்ந்துகொள்ளுமாறு எங்களை கேட்டுக்கொண்டார்கள். நாங்களும் எங்களில் தொலைபேசிஎண்களை அவர்களுக்கு கொடுத்து, இஸ்லாம் சம்பந்தமான எந்த சந்தேகங்களாக இருந்தாலும் எங்களை தொடர்புகொள்ளுமாறு அவர்களை கேட்டுக்கொண்டோம். இருவரும் சார்ந்துள்ள கொள்கைகள் சம்பந்தமாக ஆரோக்கியமான கலந்துரையாடலுக்கு நாங்கள் எப்போதும் தாயாராக உள்ளோம் எனவும் அவர்களுக்கு தெரியப்படுத்தினோம். 
அதன்பின், மதுரையில் இருக்கும் எங்கள் வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தோம். அவர்களும் மும்பை வந்தால் தங்கள் பள்ளிக்கூடத்திற்கு வருமாறு எங்களை அழைத்தனர். பிறகு மதுரை நிலையம் வந்ததும் எங்களை அன்புடன் வழியனுப்பி வைத்தனர்.  
சிறிது நாட்கள் களித்து, சகோதரர் பி.ஜே. அவர்கள் எழுதிய “ஏசு இறைமகனா?” ”இதுதான் பைபிள்” மற்றும் “பைபிளில் நபிகள் நாயகம்” ஆகிய நூல்களை மும்பையில் உள்ள அவரது முகவரிக்கு அனுப்பிவைத்தோம். அதோடில்லாமல், ”ஏகத்துவம்” பத்திரிக்கையில் வெளிவந்த சகோதரர் அஹமத் தீதாத் அவர்கள் கிறிஸ்தவ மிஷினரிகளுடன் நடத்திய விவாதத்தின் தொடரை தொகுத்து அவரது மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்தோம்.  
பிறகு சிலமாதங்கள் கழித்து, அக்டோபர் மாதம் பெருநாள் விடுமுறைக்காக நானும் எனது மனைவியும் புனேவில் இருந்து இரவு இரயில் மூலம் மதுரை வர ஆயத்தமானோம். புனே இரயில் நிலையத்தில் நாங்கள் இரயிலுக்காக காத்திருந்தோம். இரவு 12 மணிக்கு எங்கள் இரயில் வந்தது. நாங்கள் இருவரும் எங்களுக்காக பெட்டியில் ஏறி எங்கள் இருக்கையை நோக்கி சென்றபோது அங்கே பெரும் ஆச்சர்யம் ஒன்று காத்திருந்தது. 
கடந்தமுறை நாங்கள் சந்தித்த அதே பாதிரியார் திரு. மாணிக்கம் அவர்களும் அவரது மனைவியும் எங்களின் இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தனர். அவர்களை கண்டபோது எங்கள் கண்களை எங்களாலேயே நம்ப முடியவில்லை. அவர்களும் எங்களைக்கண்டு ஒருகணம் திகைத்துவிட்டனர். நாங்கள் செல்லும் அதே வண்டியில், அதே பெட்டியில் அடுத்த இருக்கையில் அவர்களை சந்திக்க வைத்த எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்! மீண்டும் ஒருமுறை அவர்களுக்கு தாவா செய்ய வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த இறைவனுக்கு நன்றிகள் சொல்லி, பொழுது விடியலுக்காக காத்திருந்தோம். 
மறுநாள் காலை, நாங்கள் எழுந்து காலை உணவுகள் உட்கொண்ட உடனேயே அந்த பாதிரியார் எங்கள் அருகே வந்து அமர்ந்தார். நாம் அனுப்பிய புத்தகங்களும் மின் அஞ்சல்களும் அவருக்கு கிடைத்ததாகவும், அதில் அவருக்கு சில சந்தேகங்கள் இருப்பதாகவும், அவற்றை இப்போது பேசலாமா? என கூறியவராக அவராகவே நம்மைத்தேடிவந்தார்.  
நாம் அனுப்பிய ”ஏசு இறைமகனா” என்ற புத்தகத்தைத்தான் அவர் முதலில் படித்ததாகவும், அந்த புத்தகத்தில் சில விசயங்கள் தவறாக இருப்பதாகவும், அப்புத்தகம் இருந்தால் அந்த தவறுகளை சுட்டிக்காட்டுவதாகவும் அவர் எங்களுக்கு தெரியப்படுத்தினார். 
வழக்கமாக, பயணத்தின்போது படிப்பதற்காக சில புத்தகங்களை நாங்கள் எடுத்துக்கொண்டு வருவது வழக்கம். குறிப்பாக மாற்றுமத சகோதரர்களுக்கு பயன்படக்கூடிய “மனிதனுக்கேற்ற மார்க்கம்”, “இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா?”, “குற்றச்சாட்டுகளும் பதில்களும்”, “திருக்குர்ஆன் அறிவியல் சான்றுகள்” போன்ற புத்தகங்கள் எப்போதும் எங்களுடன் இருக்கும். ஆனால் அன்று ஆச்சர்யமாக, அவர்கள் கேட்ட “ஏசு இறைமகனா” என்ற புத்தகமும் எங்களிடத்தே இருந்தது. அதனை எடுத்து நாங்கள் அவருக்கு கொடுத்தோம்.  
அந்த புத்தகத்தில் – அவர், தலைப்புகளை மட்டும் வாசித்துக்காட்டி, இந்த தலைப்புகள் தவறு என்பதாக கூறிக்கொண்டிருந்தார். உதாரணமாக, ”தாவீது இறைமகன்” “சாலமோன் இறைமகன்” என்றெல்லாம் எழுதியிருக்கிறார்கள். இது கிறிஸ்தவ நம்பிக்கையின்படி தவறு என்பதாக அவர் கூறினார். அப்போது நாங்கள், அவர் கையில் இருந்த புத்தகத்தை வாங்கி, அந்த தலைப்புகளுக்குக்கீழே கொடுக்கப்பட்டிருந்த பைபிள் வசனங்களை வாசித்துக்காட்டி, பைபிளில் இவ்வாறுதான் எழுதப்பட்டுள்ளது என்பதனை நாங்கள் அவருக்கு உணர்த்தினோம். 
சிறிது நேரம் அதனையே கூர்ந்து படித்த அவர், சற்று தயங்கியவராக “ஆம். பைபிள் வசனங்களைத்தான் மேற்கோள் காட்டியுள்ளனர். நான் தலைப்புகளை மட்டுமே படித்தேனே தவிர, உள்ளே உள்ளவற்றை படிக்கவில்லை. எனக்கு சிறிது அவகாசம் தாருங்கள். நான் இவற்றை முழுதாக படித்துவிட்டு பிறகு தங்களுடன் கருத்துகளை பகிர்ந்துகொள்கிறேன்” என்று கூறி “ஏசு இறைமகனா?” என்ற அந்த புத்தகத்தை வாங்கி வைத்துக்கொண்டார். 
கடவுள், ஏசு, பைபிள் போன்ற சொற்களை கேட்டதும், எங்களின் அருகே இருந்தவர்கள் கவனம் எங்களின் பக்கம் திரும்பியது. இத்தனை நேரம் அரட்டை அடித்துக்கொண்டிருந்த அவர்கள், தங்களது மற்ற பேச்சுக்களை நிறுத்திவிட்டு எங்களின் உரையாடலை கவனிக்கத்தொடங்கினர். 
மக்களின் கவனம் தம் பக்கம் திரும்புவதை உணர்ந்த அந்த பாதிரியார், உடனடியாக அவர்களுக்கு தனது கிறிஸ்தவ கொள்கையை போதிக்கலானார். ”ஏசு நமது பாவங்களுக்கு பிராயச்சித்தமாக சிலுவையில் மரித்தார்” என்பதனை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையெனில், நாளை பரலோக இராஜியத்தில் தோல்வியுறுவீர்கள்” என்று அம்மக்களுக்கு போதிக்கலானார். சற்று நேரம் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த நாங்கள், பின்பு அவரிடம்,இந்த போதனைக்கு என்ன அடிப்படை என வினவினோம். அதற்கு அவர், பைபிளில் இப்படித்தான் உள்ளதாகவும் அதன் அடிப்படையில்தான் இவ்வாறு போதிப்பதாகவும் கூறினார். 
அப்படியெனில், பைபிளில் எங்களுக்கு சில சந்தேகங்கள் உள்ளன. அதனை முதலில் தீர்த்துக்கொள்ளலாமா என வினவினோம். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். அப்போது அவரிடம் நாங்கள் “இஸ்லாமிய நம்பிக்கையின்படி குர்ஆன் எனப்படுவது இறைவனிடத்தில் இருந்து முஹம்மது என்னும் தூதருக்கு அருளப்பட்ட வேதம். அதனை இறைவனே அருளினார், முஹம்மது நபி அவர்கள் அதனை மக்களுக்கு போதித்தார்கள் என நம்புகிறோம். அதேபோல், பைபிள் என்பது என்ன? அது யாருக்கு யாரால் அருளப்பட்டது? அதனை எழுதியது யார்?” என வினவினோம். 
அதற்கு அவர் “பைபிள் என்பது ஏசு தன் வாழ்நாளில் போதித்த வேதமாகும். ஏசுவின் வாழ்நாளில் அவர் போதித்தவைகளை அவரது சீடர்கள் தொகுத்து எழுதினார்கள். அதுவே இறைவேதம்” என்பதாக தெரிவித்தார். அப்போது நாங்கள் “பைபிள் என்பது ஏசுவின் சீடர்களால் எழுதப்பட்டதாக தெரிவித்தீர்களே. ஆனால், மத்தேயு, மார்க்கு, யோவான், லூக்கா ஆகியோர் ஏசுவிடம் பாடம் கற்ற 12 சீடர்கள் அல்லவே. பிறகு இதனை எப்படி ஏசுவின் வார்த்தைகளாக நம்புகிறீர்கள்?” என வினவினோம். 
ஆனால் அவரோ “மத்தேயு, மார்க்கு, யோவான், லூக்கா ஆகிய நால்வருமே ஏசுவின் நேரடி சீடர்கள்தான் என கூறினார். நாங்கள் அவரிடம் ஏசுவின் 12 சீடர்களின் பெயர்களைக்கூறுங்கள் என வினவினோம். ஆனால் ஆச்சர்யம் என்னவெனில், ஏசுவின் 12 சீடர்களின் பெயர்கள் அவருக்கு தெரியவில்லை. ஒரு கிறிஸ்தவ மத போதகருக்கு ஏசுவின் சீடர்களின் பெயர்கள் தெரியாதது சற்று விந்தையாகவே இருந்தது.  
நான் என்னுடன் வைத்திருந்த எனது கைக்கணினியை (Laptop) எடுத்து அதில் ஏசுவின் 12 சீடர்களில் பெயர்களை அவருக்கு வாசித்துக்காட்டினோம். அதில் மத்தேயுவைத்தவிர மற்ற மூவரின் பெயர்கள் இருக்கவில்லை.  
நாங்கள் அவரிடம் - மார்க்கு, யோவான், லூக்கா ஆகியோர் ஏசுவின் நேரடி சீடர்கள் இல்லை. 12 சீடர்களில் ஒருவராக உள்ள மத்தேயுவும், நான்கு சுவிசேஷங்களில் ஒன்றை எழுதிய மத்தேயுவும் வெவ்வேறு நபர்கள். ஏனெனில் லூக்காவின் சுவிசேஷமே முதலில் எழுதப்பட்ட சுவிசேஷமென கிறிஸ்தவர்களே ஒத்துக்கொள்வதால், இந்த மத்தேயு என்பவர் நிச்சயமாக லூக்காவிற்கு பின்னர் வந்தவராகத்தான் இருக்க முடியும் என்பதனையும் அவருக்கு எடுத்துக்கூறினோம்.  
பிறகு நாங்கள் பைபிளில் மொழியைப்பற்றி பேச ஆரம்பித்தோம். ”ஏசுவும் அவரது சீடர்களும் எபிரேயு மொழி பேசியவர்கள். அப்படி இருக்கையில், திண்டுக்கல் திருச்சபை வெளியிட்ட பைபிளின் முன்னுரையில் “இது லத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது: என எழுதியுள்ளார்களே. மூல மொழி என ஒன்று இருக்கையில் ஏன் மற்ற மொழிபெயர்ப்புகளில் இருந்து மொழிபெயர்க்கவேண்டும்?” என கேள்வி வைத்தோம். ஆனால் அதற்கு மௌனத்தை தவிர வேறு பதில் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை. 
பிறகு,
  1. 1400 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட திருக்குர்ஆனின் மூலப்பிரதி ரஷ்யாவில் உள்ள தாஷ்கண்ட் மற்றும் துருக்கியில் உள்ள இஸ்தான்புல் மியூசியத்தில் பாதுகாத்து வைத்திருப்பதைப்போல் பைபிளின் மூலப்பிரதி இவ்வுலகத்தில் உள்ளதா?”
  2. திருக்குர்ஆனில் ஒரு பக்கம் அரபி மறுபக்கம் தமிழ், ஆங்கிலம் போன்று மொழிபெயர்ப்புகள் உள்ளதைப்போல் பைபிளில் ஒரு பிரதியாவது உள்ளதா?
  3. King James Version பைபிளுக்கும் International Standard Version பைபிளுக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உள்ளது ஏன்? பல வரிகளே முழுமையாக மாற்றி அமைக்கப்பட்டது ஏன்?
  4. தற்போது புழக்கத்தில் இருக்கும் International Standard Version பைபிளில் “6th Revised Edition” என எழுதியுள்ளார்களே! இறைவனின் வார்த்தை என நீங்கள் நம்பக்கூடிய ஒரு வேதத்தை எப்படி மனிதர்கள் Revise செய்ய அனுமதித்தீர்கள்?
  5. ஆண்டவரின் வார்த்தைகளை மாற்றக்கூடிய அதிகாரத்தை அவர்களுக்கு யார் வழங்கியது?
  6. இவ்வாறு வேதத்தில் மாற்றம் செய்யக்கூடிய அந்தக்குழுவை தேர்ந்தெடுப்பது யார்? எதன் அடிப்படையில் அவர்கள் தேர்ந்தடுக்கப்படுகிறார்கள்?
  7. வேதத்தில் மாற்றம் செய்யக்கூடிய அவர்கள் எதன் அடிப்படையில் அந்த மாற்றங்களை செய்கிறார்கள்?
என அடுக்கடுக்காக எங்களது கேள்விகளை தொடுத்தோம். அனைத்து கேள்விகளையும் கேட்டுமுடித்த அவர் கூறிய ஒரே பதில் “நான் இவற்றைப்பற்றி எங்கள் சக பேராயர்களை கலந்து ஆய்வுசெய்யவேண்டும். ஏனெனில் இவைகளுக்கு என்னிடத்தில் பதில் இல்லை. எனவே, நான் எங்கள் மிஷினரிகளை தொடர்புகொண்டு இந்த கேள்விகளை தங்களுக்கு தெளிவிபடுத்துகிறேன்” என்றார். 
அதன்பிறகு.........,
                             பயணம் தொடரும்....
நன்றி - jesusinvites 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger