தமிழ் மொழியில் சாட்சியம் - மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி

மும்பை - பிற மொழிகளை அறியாத ஒரு பெண்ணிற்கு தமிழில் சாட்சியம் அளிக்க மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கூத்தாயி ஆதிமூலம் என்ற பெண் மும்பை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். தமிழ் மட்டுமே தெரிந்த கூத்தாயி, ஒரு மொழி பெயர்ப்பாளர் மூலம் தனது தரப்புச் சாட்சியத்தினை அளிக்க கோரியதை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. இதனை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தினை அணுகினார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி சொந்துர்பல்தோடா கூத்தாயி ஆதிமூலம் தனக்குத் தெரிந்த மொழியில் சாட்சியம் அளிக்கலாம் என தீர்ப்பளித்தார். 1973 ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 277 ன்படி ஒரு சாட்சி, குறிப்பிட்ட நீதிமன்ற மொழியல்லாத மொழிகளில் சாட்சியம் அளிக்கும் போது அதனைப் பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என இருப்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger