மியான்மர் பயங்கரவாதத்தின் முகம் 'டைம்' இதழில்!

ரோஹிங்யா இன முஸ்லிம்களுக்கு எதிராக மியான்மர் (பர்மா) நாட்டில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்குமுறை, இனக்கலவரத்தை முன்னின்று நடத்தும் ””விராது”” என்ற புத்தபிக்குவின் முகம் அமெரிக்காவின் 'டைம்' இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு குறிப்பிட்ட டைம் இதழுக்கு மியான்மர் நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
1982ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய குடியுரிமைச் சட்டப்படி ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டு வருவதுடன் மேலும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் மீது திட்டமிட்டு கொடுந்தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதில் தலைமையாகவும் முன்னிலையாகவும் உள்ள  புத்த பிக்குவான விராதுவுக்கு ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் முழு ஆதரவு அளித்து வரும் நிலையில் தன்னை 'மியான்மரின் பின்லேடன்' என்றே அநத ஆள் அழைத்துக்கொள்கிறாராம்.
ஜூலை 1-ந் தேதியிட்ட டைம் இதழ் விராதுவின் முஸ்லிம் விரோதப் போக்கையும் பயங்கரவாத நடவடிக்கைகளையும் பதிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட இந்த டைம் இதழ் நாட்டில் தடை செய்யப்படுவதாக மியான்மர் அரசின் செய்தித் தொடர்பாளர் இ ஹ்டுட் அறிவித்துள்ளார்.
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger