விவாதச் சவடால் விட்ட தாருஸ்ஸூன்னா பதில் தராது புறமுதுகிட்டு ஓட்டம்! பூச்சாண்டி காட்ட நினைத்தேரரின் போலிமுகம் புஷ்வானமானது!


அக்கறைப்பற்று அன்ஸார் (தப்லீகி) மற்றும் அமீருல் அன்ஸார் (மக்கி) ஆகியேரரின் சிந்தனைக்குள் சிறைப்பட்டு﹐ ‘ஷெய்க்’ எதைச் சொன்னாலும் மார்க்கம் தான் என்ற குருட்டு நம்பிக்கையில் கட்டுண்டு கண்மூடிப் பின்பற்றும் ‘தக்லீத்’ அமைப்பாகிய சம்மாந்துறையில் இயங்கும் ‘தாருஸ் ஸூன்னா அல் இஸ்லாமிய்யா’ கடந்த வருட இறுதிப் பகுதியில் எமக்கு விவாத அழைப்பு விடுத்தனர். அவர்களின் விவாத அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஒப்பந்தம் செய்வதற்காய் தாருஸ் ஸூன்னாவின் வளாகம் நோக்கி சென்றது. 
‘அறிவிப்பாளர் வரிசை சரியாக அமைந்திருந்தாலும் அதன் கருத்து அல்குர்ஆனுக்கு முரண்படும் எனில் அந்த செய்தி இட்டுக்கட்டப்பட்டதே!’﹐ ‘சுூனியத்தினால் பிரிதொரு மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று நம்புவது தெளிவான ஷிர்க்காகும். இவ்வாறு நம்புபவர்கள் அப்பட்டமான முஷ்ரிக்குகளே!’ என்பது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் அழுத்தமான வாதமாகும்.
நாம் மேற்குறித்த இரு கருத்துக்களையும் மக்கள் மன்றத்தில் எடுத்துச் சொன்ன போது﹐ அன்ஸார் (தப்லீகி) உள்ளிட்ட பல வேக்காடுகள் சிறுத்தையாய் சீறியெழுந்தனர். தணல் பட்ட உடம்பாய் குதித்து நின்றனர். ‘ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சுத்த வழிகேடர்கள்! நவீன முஃதஸிலாக்கள்! பீ.ஜே யை தக்லீத் செய்யும் முகல்லிதுகள்! ஹதீஸ் கலை அறியா அரைகுறைகள்!’ என்றெல்லாம் புழுதியை எம்மீது வாரி இரைத்தார்கள். முஸ்லிம்களை முஷ்ரிக்குளாக்கும் கூட்டம் என பெரரிந்து தள்ளினார்கள்.
மக்கள் மன்றத்தில் எமக்கெதிராய் எந்த விமர்சனக் கணைகளை வீராப்பாய் எடுத்து வைத்தீர்களோ அவ்விரண்டு தலைப்புகளையும் எமது விவாதத் தலைப்பாக ஆக்கிக் கொள்வோம். அதில் ‘ஆதார புூர்வமான ஹதீஸ்கள் அல்குர்ஆனுக்கு முரண்படுமா?’ என்பதை முதல் தலைப்பாகவும்﹐ ‘சுூனியம்’ குறித்த தலைப்பை அடுத்த நாளும் விவாதத்துக்குரிய தலைப்பாக வைத்துக்கொள்ளலாம் என்பதை காரண காரியங்களை அடிப்படையாகக் கொண்டு தெளிவு படுத்தினோம்.
‘முடியாது! சுூனியம் குறித்த தலைப்பில் மாத்திரம் விவாதிப்பதாய் இருந்தால் ஒப்பந்தத்தை தொடர்வோம். இல்லையென்றால் இத்தோடு விவாத ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வோம்!’ என்று ‘ஆளைவிட்டால் போதும்’ என்று விலாங்கு மீனாய் நழுவி ஓடினார்கள் அமீருல் அன்ஸாரியும் அவரின் முகல்லிதுக் கூட்டம் தாருஸ் ஸூன்னாவும். விவாத ஒப்பந்த னுஏனு யை எமது இணையதலத்தில் பார்வையிட்ட பொது மக்கள்﹐ சிறுத்தையாய் சீறி எழுந்தவர்கள் பெட்டிப்பாம்பாய் அடங்கிப்போனதை கண்டு ஆச்சரியப்பட்டார்கள். சொல்லம்புகளால் கீறிக்கிழித்தார்கள். வேதனை தாங்க முடியாது பரிதவித்த தாருஸ்ஸூன்னா அமைப்பினர்﹐ மண்ணில் விழுந்தும் மீசையில் மண் படியவில்லை என்ற கதையாய் தங்களை காட்டிக் கொள்வதற்காய் மீண்டும் ஒரு விவாத அழைப்பினை கடந்த 18-01-2013 அன்று எமக்கு விடுத்தனர்.
‘ஆதாரபுூர்வமான ஹதீஸ்கள் அல்குர்ஆனுக்கு முரண்படுமா? என்ற தலைப்பில் நாம் உங்களோடு விவாதம் புரிய தயார். ஏனெனில் உங்கள் கொள்கை படு பயங்கர வழிகேடாகும்.’ என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.
ஏலவே﹐ இத்தலைப்பில் விவாதிக்க முடியாது என்று ஒப்பந்தத்தில் வைத்து விரண்டோடிய தாருஸ்ஸூன்னா அமைப்பினர்﹐ தாங்கள் இதற்கு முன் எம்மோடு விவாத ஒப்பந்தம் செய்ததையோ﹐ அதில் அவர்கள் பின்வாங்கியதையோ குறிப்பிடாது இருட்டடிப்பு செய்திருந்ததை அவர்களுக்கு உணர்த்தும் விதமாயும்﹐ உங்கள் கடிதத்தில் பின்வரும் விடயங்களை உள்ளடக்கி அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டு ஒரு பதில் கடிதத்தை அனுப்பி வைத்தோம். உரிய முறையில் பதில் வந்தால் நாம் எந்நேரமும் விவாதிக்கத் தயார் என்றும் குறிப்பிட்டிருந்தோம். பின்வரும் விடயங்களை இணைத்து கடிதம் தருமாறு வேண்டினோம்.
1.நாம் தான் ளுடுவுது யை முதலில் விவாதத்திற்கு அழைப்பு விடுத்தோம்.
2.நீங்களும் எமது வளாகத்திற்கு ஒப்பந்தத்திற்காய் வந்தீர்கள்.
3.குர்ஆனுக்கு ஆதார புூர்வமான ஹதீஸ்கள் முரண்படுமா? என்ற தலைப்பில் விவாதிக்க முடியாது என்பதால் நாமே ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கினோம். இதற்காக மன்னிப்புக் கேட்கிறோம்.
4.மீண்டும் இத்தலைப்பில் விவாதிக்க நாம் விரும்புகின்றோம்.
5.முதலில் நீங்கள் எமது இடம் வந்ததால்﹐ இவ்வொப்பந்தத்திற்கு நாம் உங்கள் இடத்திற்கு வருகிறோம்.
6.ஓப்பந்தத்தில் வைத்து விவாத தலைப்புகளை முடிவு செய்வோம்.
மேற்குறிப்பிட்ட விடயங்களை உள்ளடக்கியதாக எமக்கு கடிதம் அனுப்பும் பட்சத்தில் நாம் விவாதிக்கத் தயார் என்று 23-01-2013 அன்று அறிவித்திருந்தோம். இக்கடிதம் அனுப்பப்பட்டு இன்றோடு ஒரு மாதம் கடந்துவிட்டது. ஆனால்﹐ விவாத சவடால் விட்டவர்களிடமிருந்து இது வரைக்கும் எவ்வித பதிலையும் காணவில்லை.
மக்கள் மன்றத்தில் எம்மை வழிகேடர்களாய் சித்தரித்த தாருஸ் ஸூன்னா அமைப்பினர் தங்கள் கூற்றில் உண்மையாளர்களாய் இருந்தால் அதே மக்கள் மன்றத்தில் எம்மோடு விவாதிக்க வந்திருக்க வேண்டும்? சவால் விட்டுவிட்டு ஓடி ஒழியும் இவர்களின் தொடை நடுங்கித்தனம் இவர்கள் ‘அசத்தியவாதிகள்’ என்பதை அழுத்தமாய் அடையாளப்படுத்திவிட்டது. எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!
‘சத்தியம் வந்தது! அசத்தியம் அழிந்தது! அசத்தியம் அழிந்தே தீரும்! (17:81)
00123.01.2013-1
23.01.2013-2.jpeg
நன்றி - sltjweb 
Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger