அமெரிக்கா:அடுத்த மாதம் இஸ்ரேலில் நடக்க இருக்கும் மாநாட்டிற்கான அழைப்பினை உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ் ஏற்காமல் நிராகரித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற மாபெரும் இயற்பியல் விஞ்ஞானியாக போற்றப்படும் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ், ஃபலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தும் கொடூரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்ரேலில் நடக்க இருக்கும் மாநாட்டினைப் புறக்கணித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தமாதம் இஸ்ரேலில் பிரம்மாண்டமான மாநாடு ஒன்றினை இஸ்ரேல் பிரதமர் ஷிமோர் ஃபெரஸ் ஏற்பாடு செய்துள்ளார். இம்மாநாட்டில் முன்னாள் சோவியத் யூனியன் அதிபர் கார்ப்பசேவ், இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ப்ளேர் மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டன் உட்பட உலகின் பல முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
அடுத்தமாதம் இஸ்ரேலில் பிரம்மாண்டமான மாநாடு ஒன்றினை இஸ்ரேல் பிரதமர் ஷிமோர் ஃபெரஸ் ஏற்பாடு செய்துள்ளார். இம்மாநாட்டில் முன்னாள் சோவியத் யூனியன் அதிபர் கார்ப்பசேவ், இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ப்ளேர் மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டன் உட்பட உலகின் பல முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்நிலையில், இம்மாநாட்டில் கலந்துகொள்ள உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கின்ஸிற்கும் ஃபெரோஸ் அழைப்பு அனுப்பியிருந்தார். இந்த அழைப்பினை ஹாக்கின்ஸ் புறக்கணித்து விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால், இத்தகவலை இஸ்ரேல் வெளியிடாமல் மறைத்து வைத்துள்ளது.
தமது புறக்கணிப்புக்குக் காரணமாக, "ஃபாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேலிய அரசின் கொள்கை பேரழிவுக்கு வழிவகுக்கக்கூடும்; அது பாலஸ்தீனியர்களிடம் நடந்து கொள்ளும் விதத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நான் இம்மாநாட்டை புறக்கணிக்க முடிவு செய்துள்ளேன்" என்று விஞ்ஞானி ஹாக்கின்ஸ் தெரிவித்துள்ளார்.
தமது புறக்கணிப்புக்குக் காரணமாக, "ஃபாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேலிய அரசின் கொள்கை பேரழிவுக்கு வழிவகுக்கக்கூடும்; அது பாலஸ்தீனியர்களிடம் நடந்து கொள்ளும் விதத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நான் இம்மாநாட்டை புறக்கணிக்க முடிவு செய்துள்ளேன்" என்று விஞ்ஞானி ஹாக்கின்ஸ் தெரிவித்துள்ளார்.
இது இஸ்ரேலிய அரசுக்குப் பெருத்த பின்னடைவாகக் கருதப்படுவதோடு, அடுத்த மாதம் நடக்க இருக்கும் மாநாட்டில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வதற்கு முட்டுக்கட்டை இடும் என்ற அச்சத்தையும் இஸ்ரேலுக்கு ஏற்படுத்தியுள்ளது.
நன்றி - இந்நேரம்
Post a Comment