இனவாதிகளுக்குத் துணை போகும் கோடாரிக் காம்புகள்

மே மாத அழைப்பு இதழின் ஆசிரியர் கருத்து – ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ)


இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளும்இனவாத சிந்தனைகளின் தாக்கங்களும் கொதி நிலையின் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் இலங்கை முஸ்லிம்கள் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்படிப்படியாக முஸ்லிம்களை இலக்கு வைத்து இனவாதிகளின் கழுகுப்பிடி இறுகிக் கொண்டே வருகின்றதை கண்கூடாய் காண முடிகிறது. விரும்பிய இடத்தில் விரும்பிய விதத்தில் கடவுளை வழிபடும் வழிபாட்டுரிமைசிவில் உரிமைவிரும்பிய மதத்தை பின்பற்றி பிரச்சாரம் செய்யும் மத உரிமைவிரும்பிய ஆடையை அணிந்து உடலை மறைக்கும் கலாசார உரிமைஉள்ளத்தில் தோன்றும் கருத்துக்களை வெளியிடும் கருத்துரிமை உட்பட பல ஜனநாயக உரிமைகள் இன்று ஒவ்வொன்றாய் முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்டு வருகின்றமை வெள்ளிடை மலை.

இனவாதக் கும்பல்கள்ஆளும் அரசு மற்றும் அமெரிக்கா தலைமையிலான சர்வதேச அயோக்கியர்களின் கச்சிதமான காய் நகர்த்தல்களால் இலங்கைக்குள் இன்னுமொரு மியன்மார்  கொலை களத்தை தோற்றுவிப்பதற்கான முஸ்தீபுகள் முனைப்பாக முன்னெடுக்கப்படுவதனை பளிச்சென்று பார்க்க முடிகிறது. முஸ்லிம்கள் இந்நாட்டின் புர்வீகக் குடிகளல்லர்சவுதியில் இருந்து வந்த வந்தேறுகள். மீண்டும் சவுதிக்கே திரும்பிச் செல்லட்டும்!’ என்று பிரச்சாரம் செய்துஇந்தியாவில் இருந்து புத்த மதத்தை இரவல் வாங்கிக் கொண்டு இலங்கைக்கு வந்து குடியேறிய பௌத்த வந்தேறுகுடிகள் எம்மை இம்மண்ணைவிட்டும்  துரத்தியடிக்கத் துடித்துக்கொண்டிருக்கின்றனர்.

இனச்சுத்திகரிப்புக்கான இலக்கை எய்தும் பொருட்டு இல்லாத அண்டப்புளுகுகளை முஸ்லிம் சமுதாயத்தின் மீது கட்டவிழ்த்துவிடும் கைங்கரியத்திலும் காவிக்காடையர்கள் களமிறங்கியமையை கடந்த கால நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன. முஸ்லிம்களுக்குள் இரு பிரிவினர் உண்டு. ஒன்று பாரம்பரிய முஸ்லிம்கள். மற்றையது வஹாபிய அடிப்படைவாத முஸ்லிம்கள். நாம் பாரம்பரிய முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்லர்வஹாபிய அடிப்படைவாதிகளுக்கே எதிரானவர்கள். பாரம்பரிய முஸ்லிம்களையும் இந்நாட்டையும் வஹாபிய தீவிரவாதத்திலிருந்து காப்பதே எமது அடிப்படை பணி’ என்று இனவாத அமைப்புகள் கடந்த காலத்தில் மேடைகள் தோரும் முழங்கியதையும்இன்று வரை முழங்கி வருவதனையும்  அனைவரும் அறிந்து வைத்துள்ளோம். முஸ்லிம்களை இரு கூறாகப்பிரித்துஎமக்குள்ளேயே வெட்டுக் குத்தை ஏற்படுத்திஎமது பலத்தை சிதைத்துஎம் விரலைக் கொண்டே எம் விழிகளை குத்தும் நரியாட்டத்தை ஆடிஇறுதியில் பாரம்பரிய முஸ்லிம்களுக்கு இதோ உதவிக்கரம் நீட்டுகிறோம்! என்ற சமாதான முகமூடி அணிந்து கொண்டுஅரசும் அமெரிக்க வல்லூருகளும்காவிக் கும்பல்களும் ஒன்றாய் கைகோர்த்து ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் இம்மண்ணிலிருந்து முழுவதுமாய் துடைத்தெறிந்துஎம்மை முகவரியற்றவர்களாய் மாற்றுவதற்குண்டான தங்களது வழமையான இரகசியத்திட்டத்தினை மியன்மாரைப் போன்று இலங்கையிலும் செயல்படுத்துவதற்கு முனைப்புக்காட்டி வருகின்றனர்.

முஸ்லிம்களை கருவறுக்கும் இனவாதிகளின் நரித்தந்திரத்திற்கு துணைபோகும் பச்சைத் துரோகத்தினை முஸ்லிம் பெயர் தாங்கிகள் பவ்வியமாய் செய்து வருகின்றனர்இனவாத அமைப்புகள் எந்த வஹாபிய தீவிரவாதம்’ இலங்கையில் உள்ளதாக படம் காட்டுகின்றனரோ இந்நச்சுச் சிந்தனையை முதன் முதலாக இலங்கைக்குள் விதைத்தவர்களே நாம் பாரம்பரிய முஸ்லிம்கள்’ என்று சொல்லிக் கொள்ளும் சில சமூகத் துரோகிகளே.

குறிப்பாக, ‘குர்ஆன் - ஸூன்னா என்ற தூய வழிகாட்டுதல்கள் மட்டுமே இஸ்லாம். இதற்குப்புறம்பான அனைத்தும் வழிகேடுகளே!’ என்று தவ்ஹீத்வாதிகள் இந்நாட்டில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டியவர்கள் சமாதிகளுக்கு முன்பாக எப்படி தலை சாய்க்க முடியும்என்று ஆதாரங்களோடு வினா தொடுத்து மக்களை ஷிர்க்கிலிருந்து காத்து வருகின்றனர்எமது மார்க்க சான்றுகளுக்கு முன்னால் சமாதி வழிபாட்டாளர்களின் வாதங்கள் தவிடுபொடியாக மாறிமக்கள் ஏகத்துவத்தின் பால் ஒதுங்குவதனை சகிக்க முடியாத பாரம்பரிய முஸ்லிம்கள் எனும் கப்ரு வணங்கிகள் எம்மை பழிதீர்ப்பதற்காக கையிலெடுத்துள்ள ஆயுதமே வஹாபிஸம்’ எனும் புச்சாண்டியாகும்.

இலங்கையில் வஹாபிஸ பயங்கரவாதம் நிலவுவதாக ஊடகங்கள் ஊடாக உலகத்துக்கு முதலில் பரப்புரை செய்த பெருமை முன்னால் கொழும்பு பிரதி மேயர் அஸாத் ஸாலி அவர்களின் சகோதரரும்Islamic Solidarity Fund என்ற அமைப்பின் தலைவருமாக இருக்கும் றியாஸ் ஸாலிஹ் என்பவராவார்கடந்த 2010 - 09 - 19 அன்று Lakbima News, The Island மற்றும் சில ஆங்கில இணையதளங்களில் Wahhabist terriorist training in Sri Lanka? THE ISSUES எனும் தலைப்பில் றியாஸ் ஸாலியினால் எழுதப்பட்ட ஒரு கட்டுரை பிரசுரமாகியது. இதில் பின்வரும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

  •  உலகம் முழுவதும் வஹாபிஸ அடிப்படை வாதத்தை பரப்புவதற்காக ஒரு வருடத்திற்கு 87 பில்லியன் அமெரிக்க டொலர்களை சவுதி அரேபியா செலவிடுகின்றது.


  •  இலங்கையிலே இந்நிதியைக் கொண்டு வஹ்ஹாபிய பள்ளிவாசல்கள் கட்டப்படுகின்றன.
  • சுமார் 300 பள்ளிவாசல்கள் இது வரை நிர்மானிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 35 பள்ளிகள் மட்டுமே வக்ப் சபையில் பதிவு செய்யப்பட்டவைகள். ஏனையவை சட்ட ரீதியற்றவை.
  •  பணம்வீடு வழங்கி ஏழைகள் வஹ்ஹாபிஸத்தின் பால் ஈர்க்கப்படுகின்றனர்.


  • சவுதியிலுள்ள வஹாபிய பல்கலைக்கழகங்களுக்கு புலமை பரிசில்கள் வழங்கி முஸ்லிம் இளைஞர்கள் அனுப்பப்படுகின்றனர்இவர்கள் நாட்டுக்குத்  திரும்பி வஹாபிஸத்தை பரப்புகின்றனர்.


  •  SLBC எனும் இலங்கை வானொலிச் சேவையில் வஹாபிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதில் கடமையாற்றுவோர் மற்றும் நிகழ்ச்சி வழங்குநர்களில் 98 விகிதத்தினர் வஹாபிகளே.


  • சட்ட ரீதியற்ற முறையில் வானொலி அலை வரிசைகளை வஹ்ஹாபிகள் நடாத்தி வருகின்றனர்.


  • பாடத்திட்டங்களிலும் வஹாபி ஆதிக்கம் உள்ளது.


  • வஹ்ஹாபிகள் ஸூபிகளுக்கு எதிரானவர்கள். துப்பாக்கிகள் சகிதம் வந்து ஸூபி பள்ளிகளை தாக்குகின்றனர்.


  • கிழக்கிலங்கையில் ஆயுதம் தரித்த ஜிஹாத் குழுக்கள் இயங்குகின்றன.


  • இலங்கையில் வஹ்ஹாபிஸத்தை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்’ எனும் அமைப்பே பின்னணியில் இருந்து பரப்புகிறது. இதன் தலைவரே பீ.ஜெய்னுலாப்தீன் என்பவராவார்.

இவை மூன்றாண்டுகளுக்கு முன்னால் றியாஸ் ஸாலிஹ் எனும் பாரம்பரிய முஸ்லிமினால்’ எழுதப்பட்ட வரிகளாகும். இதனை அன்றும் அமைச்சராக இருந்த அலவி மௌலானா எனும் பாரம்பரிய முஸ்லிம்’ அரசியல்வாதி ஆமோதித்து அறிக்கை வேறு விட்டதை யாரும் மறந்திருக்க மாட்டோம்.

அன்று எம்மவர்களால் தூவப்பட்ட நச்சுக்கருத்துத் தான் இன்று பொது பலசேனாவின் ஞான சார எனும் காவிக் கதாநாயகரின் நாவிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. மார்க்க ரீதியாக நிலவும் கருத்து வேறுபாடுளை உரிய முறையில் அனுகாமல்காடைத்தனங்கள் மூலமும்காட்டிக் கொடுப்புகள் மூலமம் சாதித்துவிடலாம் என்று கப்ரு வணங்கிகள் கருதுகின்றனர் போலும்.

அதுமட்டுமன்றிவஹ்ஹாபி பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி ஜனாதிபதி மற்றும் பொது பல சேனா அமைப்பின் தலைமை காரியாலயங்களுக்கு பாரம்பரிய முஸ்லிம் பள்ளிவாசல்கள் கடிதம் எழுதும் அளவுக்கு காட்டிக் கொடுப்புகள் கலைகட்டிச் செல்வதை காண முடிகிறது. MRCA/13/06/GL/09 எனும் பதிவையுடைய காலியிலுள்ள பள்ளிவாசல் 08-07-2012 அன்று ஜனாதிபதி அவர்களுக்கும்பேருவலை மஸ்ஜிதுல் அப்ராரில் இருந்து 25.05.2010 அன்று ஜனாதிபதி உள்ளிட்ட 26 அமைப்புகளுக்கும்அநுராதபுரம் முஹிதீன் ஜூம்ஆ பள்ளியிலிருந்து 07.11.2012 அன்று பொது பல சேனாவுக்கும் வஹ்ஹாபி பள்ளிகளை தடை செய்யுமாறு கோரி கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

சாதாரண பள்ளி நிர்வாகிகள் தான் இப்படியென்றால் முஸ்லிம் அமைச்சர்களும் இதே ஈனச் செயலை பரவலாக செய்து வருவதை காணமுடிகிறது. இந்நாட்டில் பள்ளிவாசல்கள் இனவாதிகளால் தாக்கப்பட்டமை உலகறிந்த உண்மை. ஆனால்இந்தப் பேருண்மை அமைச்சர் காதருக்கும் அமைச்சர் அஸ்வருக்கும் தெரியாமல் போனது தான் வியப்பாக உள்ளது. இந்நாட்டில் எந்தவொரு பள்ளிவாசல்களும் தாக்கப்படவில்லை. மூன்றே மூன்று ஸியாரங்கள் மட்டுமே உடைக்கப்பட்டன. அதனை செய்தவர்களும் சிங்களவர்களல்லர்முஸ்லிம்களே!’ என்று அமைச்சர் அஸ்வரும் காதரும் எமது காதில் புச்சுற்ற எத்தனித்ததை யாரும் மறந்திருக்க மாட்டோம். ஸியாரங்களை காவல்துறையினர் வேடிக்கை பார்க்க அநுராதபுரத்தில் உடைத்தவர்கள் சிங்களவர்களே என்று அப்பட்டமாய் தெரிந்தும் முஸ்லிம்கள் தான் உடைத்தனர் என்று இவர்கள் கூறுவார்களேயானால் அந்த முஸ்லிம்கள் யார்அவர்கள் பாரம்பரிய முஸ்லிம்களுக்கு எதிரான வஹ்ஹாபிகள் எனும் தவ்ஹீத் வாதிகள் தான் என்று சொல்லாமல் சொல்வதை பார்க்கிறோம்.

இந்நாட்டில் முஸ்லிம்களை ஒழிப்பதற்கான இனவாதிகளின் திரைமறைவுத்திட்டங்களுக்கு முஸ்லிம் நாமம் தரித்த இது போன்ற துரோகிகள் மார்க்கப் போர்வையிலும்அரசியல் போர்வையிலும் இருந்து உதவிக்கொண்டு தான் உள்ளனர்தங்களுக்குக் கிடைக்கும் அற்ப பதவிகளுக்கும் அந்தஸ்துகளுக்கும் ஆசைப்பட்டு ஒட்டு மொத்த சமூகத்தையும் பலிகடாவாக்க நினைக்கும் இவர்கள் உண்மையில் களையப்பட வேண்டிய நச்சுக் களைகள் மட்டுமல்லசமூகத்தையே சமாதிகட்ட நினைக்கும் கோடாரிக் காம்புகள் என்பதனையும் நாம் புரிந்து கொண்டால் சரிஉண்மையை உணருமா எம் சமூகம்?

நன்றி -அழைப்பு 

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger