+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது!


+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது!சென்னை:  நாளை (09.05.2013) வியாழக் கிழமை  +2 தேர்வு முடிவுகள் வெளியிடப் படுகிறது. இதனை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 1ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 8 லட்சத்து 4 ஆயிரத்து 535 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதி இருக்கிறார்கள். விடைத்தாள் மதிப்பீட்டு பணி ஏப்ரல் 13ஆம் தேதி முடிந்தது.

இந்நிலையில், பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, நாளை காலை 10 மணிக்கு சென்னை கல்லூரிச்சாலை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள தேர்வுத்துறை இயக்குனரகத்தில் வெளியிடப்படுகின்றன.

அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தேர்வு முடிவுகளையும், ரேங்க் பட்டியலையும் வெளியிடுகிறார். தேர்வு முடிவுகள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட அடுத்த சில வினாடிகளில்  http://tnresults.nic.in
இணைய தளத்தில் வெளியிடப்படும்.

நன்றி - இந்நேரம் 

Share this article :

Post a Comment

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger