Featured Post Today
print this page
Latest Post
Showing posts with label இராணுவம். Show all posts
Showing posts with label இராணுவம். Show all posts

இந்திய இராணுவத்தின் இரட்டை நிலை!


இந்திய இராணுவத்தின் இரட்டை நிலை!

இஜாஸ் அஹ்மத் மிர்ஸா
2012 ஆகஸ்ட் 29 அன்று பெங்களூரிலிருந்து காவல்துறையினர் பிடித்துச் சென்ற முஸ்லிம் இளைஞர்கள் 12 பேரில் ஒருவர்தாம் இஜாஸ் அஹ்மத் மிர்ஸா. பத்திரிகையாளர்கள், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர்கள் உள்பட முக்கியப் பிரமுகர்கள் சிலரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிக் கொண்ருந்தனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பயங்கரவாதத் தடைச் சட்டப் பிரிவுகளின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் உயர்கல்வி மணவர்கள். நல்ல வேலையில் உள்ளவர்கள். இவர்களில் பத்திரிக்கையாளரான முதியுர்ரஹ்மான் சீத்தீகி, உயர்கல்வி பயின்று வரும் முஹம்மது யூசுப் நள்பந்தி ஆகியோருக்கு எதிராகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தேசியப் புலனாய்வு அமைப்பால் (என்.ஐ.ஏ) முடியவில்லை. எனவே நீதிமன்றம் அவ்விருவரையும் குற்றச்சாட்டிலிருந்து வ்இடுவித்தது. இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். போதிய ஆதாரங்களைத் தாக்கல் செய்ய இயலாததால் இஜாஸ் அஹ்மத் மிர்ஸா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

மத்திய அரசின் இராணுவப் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் (D.R.D.O )கீழ் செயல்படுகின்ற சென்டர் ஃபார் ஏர்போன் சிஸ்டத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வந்தார் இஜாஸ். மாநிலக் காவல்துறையினர், புலனாய்வு அமைப்பினர் ஆகியோரின் கடும் விசாரணைகளுக்குப் பிறகு மட்டுமே ஒருவருக்கு இந்தத் துறையில் வேலை கிடைக்கும். முஸ்லிம் என்றால் கேட்கவே வேண்டாம். இதில் சேர்ந்த பிறகு அவர் எச்சரிக்கை மிகுந்த பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவார். இவ்வாறு இருக்கும்போது, இஜாசுக்கு பயங்கரவாதத் தொடர்பு இருக்கிறது என்ற பெங்களூரு காவல் துறையினரின் வாதம் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது.

ஜாமீன் பெற்று இஜாஸ் வெளிவந்த அதே நாளில், அவர் இராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனப் பணியிலிருந்து நீக்கப்படும் உத்தரவினை சென்டர் ஃபார் ஏர்போன் சிஸ்டத்தின் இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கை (CABS/1001/482/Adm) தெரிவித்தது. நாட்டின் பாதுகாப்பு ஆய்வுக்காகத் தம் இளமையை அர்ப்பணித்த ஓர் இளைஞரிடம் தேசம் நடந்து கொள்ளும் முறைதானா இது. இளைஞர் ஒருவரை தவறாக வழக்கில் சிக்க வைத்தல்; அது நிரூபணமாகும் முன்பே அவரைப் பணியிலிருந்து நீக்குதல் என்பது அப்பட்டமான பாகுபாடும் அநீதியுமாகும். ஸம்ஜாதா எக்ஸ்பிரஸ், மாலேகான், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரி கர்னல் புரோஹித்துக்கு இதுவரை தொடர்ந்து சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது என்ற செய்தி வெளியானதும் இந்தப் பின்னணியில்தான்.

மாலேகான்:குண்டுவெடிப்பு  முக்கிய சதியாளர் லெப்டினென்ட் கர்னல் புரோஹித்!

இஜாஸை பணியிலிருந்து நீக்கியதும் புரோஹித்துக்கு இப்போதும் சம்பளம் வழங்கிக் கொண்டிருக்கும் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே அந்தோணியின் துறைதான். மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருப்பவர் என்ற பாராட்டைப் பெற்றவர் அந்தோணி. ஆனால், நிரபராதி என பொது சமூகமும், மனித உரிமை ஆர்வலர்களும் ஆணையிட்டுச் சொல்கின்ற, குற்றவாளி என எந்தப் புலனாய்வு அமைப்பாலும் நிரூபிக்கப்படாத இஜாஸ் அஹ்மத் மிர்ஸாவை நீக்கியதற்கான நியாயத்தை அந்தோணி மக்களிடம் கூற வேண்டிய நிலை வரும். இஜாஸ் அடையாளம் மட்டுமே. பாதுகாப்புத் துறை இரட்டை நிலையைக் கைவிட வேண்டும். அது நடக்குமா என்பதை என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே அந்தோணி
இதில் ஆறுதல் தரும் செய்தியாக. பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லாததால் நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்துள்ள பெங்களூரு பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் இளம் விஞ்ஞானி இஜாஸ் அஹ்மத் மிர்ஸாவுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என பிரஸ் கவுன்சில் தலைவர் நீதியரசர் மார்கண்டேய கட்ஜு பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே அந்தோணியை வலியுறுத்தியுள்ளார்.

நன்றி: சமரசம் http://www.samarasam.net/01-15_Apr_13/index.htm#9 )
நன்றி - வலையுகம் 

0 comments

பிரபலமானவை

 
Support : @Lanka Web DSN | MSMS DISc
Copyright © 2011. pudukaigani - All Rights Reserved
Template Created by MSM Safwan Published by Pudhugai Gani
Proudly powered by Blogger